குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதானிஸ்லாம் - பாகம் 2

தமிழ் முஸ்லிம் தளத்தின் “இஸ்மவேல், முகமது - பைபிள்” என்ற கட்டுரைக்கு இதுவரை கொடுத்துள்ள மறுப்புக்களை கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.

இப்பொழுது பாகம் 2(B) தொடர்கிறது... 


குர்-ஆன் வசனத்திலேயே (மொழிபெயர்ப்பு) கைவைத்த இது தான் இஸ்லாம் 

இது தான் இஸ்லாம் தளம் "பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை முன்வைத்தனர். நான் அதற்கு பதில் எழுதினேன். என் பதிலுக்கு ஒரு மறுப்புக் கட்டுரையை அவர்கள் எழுதினார்கள். அவர்கள் மறுப்பு எழுதும் போது, அவர்களுக்கு ஓரளவிற்கு பதில் சொல்லமுடியும் என்ற நம்பிக்கை உள்ள என் கருத்துக்களுக்கு மட்டும் தான் மறுப்பு எழுதினார்கள். 

என் இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு பதில் தராமல் அல்லது அவர்கள் கருத்து சொல்லாமல் மௌனமாக இருந்துவிட்டார்கள். அவர்கள் கட்டுரைக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். இந்த கட்டுரையில், அவர்கள் மௌனமாக விட்டுவிட்ட என் 2 கேள்விகளை வாசகர்கள் முன்வைக்கின்றேன். 

கீழ்கண்ட என் இரண்டு கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. 

  1. குர்-ஆன் வசனத்தையே மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள். 
  2. இஸ்லாமிய நபி என்றுச் சொல்லிக்கொண்டு வரும் எல்லாரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

இதைப் பற்றி அவர்கள் கருத்துச் சொல்லவில்லை.

1. குர்-ஆன் வசனத்தையே மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள். 

தங்கள் கட்டுரைகளில் பல முறை ஆதாரமில்லாமல் அவர்கள் சொல்லும் வாதம் "பைபிளில் மாற்றம் செய்துவிட்டார்கள்" என்று. ஆனால், ஒரு கட்டுரை வரைவதற்காக "குர்-ஆன் வசனத்தையே மாற்றி (அ) திருத்தி" சொல்லியிருக்கிறார்கள், இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தளம் நண்பர்கள். 

"பைபிள் புகழும் இஸ்மவேல்" கட்டுரையில் அவர்கள் மேற்கோள் காட்டிய குர்-ஆன் வசனம்: கவனிக்கவும் , இதில் (இஸ்மவேல்) என்ற வார்த்தை இவர்கள் கைவேலை.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: 

இது குறித்து குர்ஆன் வசனத்தை பார்த்து விட்டு வருவோம். 

(இஸ்மவேல்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினான், 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். கர்த்தர் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.' (அல்குர்ஆன்: 37:102) 

இந்த குர்ஆன் வசனம், ஆப்ரஹாம் பலியிட முடிவெடுத்தது இஸ்மவேலைதான் என்று தெளிவாக அறிவிக்கின்றது. குர்ஆனை ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்கள் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று வலிய அவர் பெயரைத் திணித்துள்ளார்கள்.

உமர்:

குர்-ஆனில் இந்த வசனத்தில் முதலில் "இஸ்மவேல்" தான் பலியிடப்பட்டது என்று பெயர் வருகிறதா அல்லது அந்தப் பெயரை அடைப்பு குறிக்குள் இடுகிறீர்களா? 

குர்-ஆன் குறிப்பிட்டு "இஸ்மவேல்" தான் என்றுச் சொல்வதில்லை, அரபிக் குர்-ஆனில் "இஸ்மவேல்" என்ற வார்த்தை இந்த வசனத்தில் உள்ளதா என்று பாருங்கள்.(எனக்கு அரபி தெரியாது, எனவே, வசனத்தை அரபியில் இருந்தால், சொல்லுங்கள்) 

ஹதீஸ்களிலிருந்து இஸ்மவேல் என்று தெரிந்துக்கொண்டு இங்கு "இஸ்மவேல்" என்று மொழி பெயர்த்துள்ளீர்கள். 

ஆனால், "இஸ்மவேல்" என்று இந்த வசனம் சொல்வதில்லை.

குர்-ஆன் 37:100 

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ 

"என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்). 

குர்-ஆன் 37:101 

فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ 

எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். 

குர்-ஆன்37:102 

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاء اللَّهُ مِنَ الصَّابِرِينَ 

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." 

நான் www.tamililquran.com , www.chittarkottai.com/quran/index.php என்ற தளங்களை தேடிவிட்டேன், நீர் சொன்னது போல, அடைப்பு குறிக்குள் "இஸ்மவேல்" பெயர் இல்லையே? வேறு ஏதாவது மொழி பெயர்ப்பு இருந்தால் சொல்லவும். இந்த இரண்டு தளங்களிலும் "அம்மகன்" என்று தான் வருகிறது.

குர்-ஆன் வசனத்தில் தமிழ் முஸ்லிம் தளம் செய்த திருத்தம்: 

குர்-ஆன் மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு வார்த்தையை எடுத்து அதற்கு பதிலாக வேறு ஒரு வார்த்தையை சேர்த்து "இது தான் குர்-ஆன் வசன ஆதாரம்" என்றுச் சொல்லி மாற்று மதத்தவர்களை முட்டாளாக்க பார்த்தவர்கள் இவர்கள். 

சாதாரணமாக ஒரு வசனத்தில் ஒரு பகுதியை மட்டும் மேற்கோள் காட்ட விரும்புகிறவர்கள் கீழ் கண்ட முறையை கையாள்வார்கள். 

1. வசனத்தின் முற்பகுதியை காட்ட வேண்டுமானால்: 

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். . . . . . . . . . . (குர்-ஆன்37:102) 

என்று கடைசிப் பகுதியின் இடத்தில் சில புள்ளிகளை (. . . . .) வைத்துகாட்டுவோம். 

2. வசனத்தின் நடுப்பகுதியை காட்டவேண்டுமானால்: 

(. . . . . .) (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். (. . . . . .) . (குர்-ஆன்37:102) 

3. வசனத்தின் கடைசிப் பகுதியை மட்டும் காட்டவேண்டுமானால்: 

( . . . . . ) (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." (குர்-ஆன்37:102) 

4. பொருள் புரியவேண்டும் என்பதற்காக, சொந்த வார்த்தைகளைச் சேர்த்தால், எந்த வார்த்தைகளை சேர்த்தோம் என்று கீழே அதற்காக விளக்கத்தைக் கொடுப்போம்: 

குர்-ஆன் மொழிபெயர்ப்பாளர்களே, "இஸ்மவேல்" என்று எழுத தயங்கி, "அம்மகன்" என்று எழுதினார்கள். 

இந்த வசனத்தில் நம் நண்பர் அடைப்புக்குறிக்குள் இருந்த "அம்மகன்" என்ற வார்த்தையை எடுத்துவிட்டு "இஸ்மவேல்" என்று எழுதி, இது தான் குர்-ஆன் வசனம் என்றுச் சொல்கிறார். 

எந்த குர்-ஆன் மொழிப்பெயர்ப்பாளரும் ஹதீஸ்படி இஸ்மவேல் என்று தான் தெரிந்தாலும், குர்-ஆன் மூலமொழியில் இஸ்மவேல் என்று இந்த வசனத்தில் இல்லாததால் "அம்மகன்" என்று தான் எல்லாரும் மொழி பெயர்த்துள்ளனர். 

கீழே சில மொழிபெயர்ப்புகளைக் காணலாம்:

1) Dr. S. முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு ( ஹாஜி முஹம்மது ஜான் லிட்டரரி & சாரிடபிள் டிரஸ்ட்) இது தான் இவர்கள் பயன்படுத்திய குர்-ஆன் மொழிபெயர்ப்பு 

குர்-ஆன்37:102 பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்."

2) Yousuf Ali, Translation 

037.102 

YUSUFALI: Then, when (the son) reached (the age of) (serious) work with him, he said: "O my son! I see in vision that I offer thee in sacrifice: Now see what is thy view!" (The son) said: "O my father! Do as thou art commanded: thou will find me, if Allah so wills one practising Patience and Constancy!" 

3) Shakir Translation 

SHAKIR: And when he attained to working with him, he said: O my son! surely I have seen in a dream that I should sacrifice you; consider then what you see. He said: O my father! do what you are commanded; if Allah please, you will find me of the patient ones.

4) Pickthal Translation 

PICKTHAL: And when (his son) was old enough to walk with him, (Abraham) said: O my dear son, I have seen in a dream that I must sacrifice thee. So look, what thinkest thou? He said: O my father! Do that which thou art commanded. Allah willing, thou shalt find me of the steadfast.

Source of English Quran Translations : www.usc.edu/dept/MSA/quran/037.qmt.html 

இப்போது "இது தான் இஸ்லாம்" கொடுத்த வசனத்தைப் பாருங்கள்:

(இஸ்மவேல்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினான்¢ 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். கர்த்தர் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.' (அல்குர்ஆன்: 37:102 )

குர்-ஆனை மொழி பெயர்த்தவர்கள் சரியான பொருள் கிடைக்கவேண்டும் என்பதற்காக பல இடங்களில் அடைப்புகுறிக்குள் சில விவரங்களை சேர்ப்பார்கள், இதில் தவறு இல்லை. ஆனால், இவர் "நிஜாமுத்தீன்(இது தான் இஸ்லாம்)" மொழி பெயர்த்தவர்கள் செய்ய பயந்து "அம்மகன்" என்று எழுதியதை "எடுத்துவிட்டு" அந்த இடத்தில் "இஸ்மவேல்" என்று எழுதி கிறிஸ்தவர்களுக்காக எழுதப்படும் கட்டுரையில் எழுதுகிறார் என்றால், இனி இவர்கள் நேர்மையைப் பற்றி என்ன சொல்ல முடியும்? 

மட்டுமல்ல, அல்லாஹ் என்று இருந்ததை இவர் "கர்த்தர்" என்று எழுதினார். இதை வேண்டுமானாலும் விட்டுவிடலாம் ஏன் என்றால், அல்லாவும், கர்த்தரும் ஒருவர் தான் என்று இஸ்லாம் சொல்கிறது (ஆனால், கர்த்தர் வேறு, அல்லா வேறு என்று கிறிஸ்தவர்களுக்குத் தெரியும்). 

  1. ஏன் இவர் இப்படி தில்லுமுல்லு செய்யவேண்டும். 
  2. இன்று ஒரு சிறு கட்டுரைக்காக குர்-ஆன் மொழிபெயர்ப்பை மாற்றியவர்கள், ஒரு பெரிய வேலைக்காக மூலத்தில் கைவைக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? (தன் மொழிபெயர்ப்பில் தன் பெயரை 8 இடத்தில் சேர்த்ததற்காகவும், தன்னை ஒரு நபி என்றுச் சொன்னதற்காகவும் "ரஷித் காலிபா" என்பவர் கொல்லப்பட்டார்.) 
  3. இஸ்லாம் பற்றி இவர்கள் முன்வைக்கும் வசனத்திலேயே இவ்வளவு "ஏமாற்றுதல்" புகுத்தப்படும் என்றால், கிறிஸ்வத்தைப் பற்றி இவர்கள் சொல்வதில் எந்த அளவு இவர்களிடம் நேர்மையை நாம் எதிர்பார்க்கமுடியும்? 
  4. இப்படி குர்-ஆனின் வசனத்தை மாற்றி எழுதிவிட்டு, பைபிளில் மாற்றம் செய்துவிட்டார்கள் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்! 
  5. உண்மை வசனத்தை அப்படியே எழுதிவிட்டு, ஹதீஸ்படி இதில் வரும் "அம்மகன்" என்பது "இஸ்மவேலை" குறிக்கும் என்றுச் சொல்லியிருக்கவேண்டும்? 
  6. இவர்கள் கொடுத்த மாற்றப்பட்ட வசனத்தை படிப்பவர்கள், கிறிஸ்தவர்கள் "குர்-ஆனில் இஸ்மவேல் என்று உள்ளது" என்று நினைக்கவேண்டும் என்பதற்காக குர்-ஆனையே மாற்றி எழுதினால் எப்படி? 

எந்த மொழிபெயர்ப்பில் இப்படி உள்ளது? என்று கேட்டேன் அதற்கு இவர்களிடமிருந்து பதில் இல்லை. 

Dr. S. முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு தான் இவர் பயன்படுத்தியுள்ளார், உங்கள் மொழிபெயர்ப்பில் இப்படி திருத்தம் செய்து வெளியிடுவது உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டால், இவர்களுடைய( ஹாஜி முஹம்மது ஜான் லிட்டரரி & சாரிடபிள் டிரஸ்ட்) பதில் என்னவாக இருக்கும்?

அப்படி "இஸ்லாயீல்" வரும் வசனம் உள்ள மொழி பெயர்ப்பாகிய "P. ஜைனுல் ஆபிதீன்" மொழிபெயர்ப்பை பயன்படுத்தவேண்டியது தானே. அதை விட்டுவிட்டு இருந்த வார்த்தையை எடுத்துவிட்டு, இவராகவே இஸ்மாயீல் என்று சேர்த்து "இது தான் குர்-ஆன வசனம்" என்று ஆதாரம் காட்டுவது அறிவுடமையாகாது. P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மட்டும் தான் இந்த வசனத்தில் "இஸ்மாயீல்" என்று அடைப்புக்குறிக்குள் தன் மொழி பெயர்ப்பில் எழுதுகிறார். (இவருடைய மொழிபெயர்ப்பில் பல தவறுகள் உள்ளது என்று இஸ்லாமியர்களில் ஒரு சாரார் எண்ணுகின்றனர், இதனால் தான் இவர் மொழி பெயர்ப்பை இது தான் இஸ்லாம் தளம் பயன்படுத்தவில்லையோ!) 

P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிபெயர்ப்பு 

குர்-ஆன் 37:102 : அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு" என்று கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்" என்று பதிலளித்தார். 

Source : www.onlinepj.com 

முதலில் உங்கள் வேதத்தில் உள்ளதை அப்படியே மேற்கோள் காட்ட கற்றுக்கொள்ளுங்கள். 

ஒரு வேளை இந்த கட்டுரையை படிக்கின்ற நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருந்தால், இதற்கு உங்கள் பதில் என்ன? 

இதை படிப்பவர்கள் கிறிஸ்தவராக இருந்தால், இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள் "இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்களை, முதலில் பொன்னை புடமிடுவதைப் போல் புடமிட்டுத் தான், நாம் அதன் நம்பகத்தன்மையை தெரிந்துக் கொள்ள முடியும்?" அதை சொல்பவர்கள், நிஜாமுத்தீனாக அவர்களாக இருந்தாலும் சரி, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களாக இருந்தாலும் சரி.


2. இஸ்லாமிய நபி என்றுச் சொல்லிக்கொண்டு வரும் எல்லாரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இதைப் பற்றி அவர்கள் கருத்துச் சொல்லவில்லை. 

முகமதுவை கிறிஸ்தவர்கள் மணமுரண்டாக நிராகரித்து வருகிறார்கள் என்று இது தான் இஸ்லாம் தளம் எழுதியது. இஸ்லாமிய பெயர் வைத்துக்கொண்டு வரும் எல்லா நபிகளையும் எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்றும், மெஹ்தி என்பவரும், ரஷீத காலிபா என்றும் இருவர் நபிகள் என்று இஸ்லாமியர்களில் ஒரு சாரார் ஏற்றுக்கொண்டுள்ளனர். இவர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டு இருந்தேன்? ஆனால், இதற்கும் பதில் இல்லை.

இது தான் இஸ்லாம் தளம் எழுதியது 

// கிறிஸ்த்தவ உலகம் முஹம்மத் அவர்களை மணமுரண்டாக நிராகரித்து வருகன்றது.// 

ஈஸா குர்-ஆன் பதில்: 

நபி (தீர்க்கதரிசி) என்று சொல்லிக்கொண்டு வருகிற எல்லாரையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? பைபிள் தெளிவாகச் சொல்கிறது, இயேசுவிற்கு அடுத்து, பரிசுத்த ஆவியானவருக்கு அடுத்து வேறு யாரும் வரவேண்டிய அவசியமில்லை என்று, இப்படி இருக்க கிறிஸ்தவர்கள் எப்படி முகமதுவை நம்ப முடியும்? சொல்லுங்கள். 

"மெஹ்தி" Mehdi 

ஷிய முஸ்லீம்கள் "மெஹ்தி" Mehdi என்ற ஒரு "நபி" அல்லது ஒருவர் வருவார், அவர் வந்து உலகத்தை மாற்றுவார் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவரை சுன்னி முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? இவரைப் பற்றி சில ஹதீஸ்கள் உள்ளது என்று விகீபீடியா சொல்கிறது ( en.wikipedia.org/wiki/Mahdi). எனவே, ஒருவர் நபி என்று வந்தால், எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை.

வந்தவர் உண்மையாக இறைவன் அனுப்பியவராக இருந்து, மக்கள் அவரை நம்பவில்லையானால், அவர்களுக்கு இறைவன் அதற்கேற்ற கூலி கொடுப்பான் என்பதை மட்டும் நான் நம்புகிறேன். கிறிஸ்தவர்களுக்கு பைபிளில் விவரமாக எல்லாம் சொன்னதால்( ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை), நாங்கள் நம்புவதில்லை, அவ்வளவு தான்.

ரஷீத் காலிஃபா: 

ரஷீத் என்று ஒருவர் கூட ஒரு நபி என்று சொல்லிக்கொண்டு வந்தார் (November 19, 1935 – January 31, 1990) , குர்-ஆனில் உள்ள "Numerical Miracle" என்று சொல்லிக்கொண்டு ஒரு கலக்கு கலக்கினார். தான் மொழி பெயர்த்த குர்-ஆனில் "தன் பெயரை" கூட சேர்த்துக்கொண்டார். 

தன்னிடம் அல்லா பேசுவதாகச் சொன்னார், அவரையும் எத்தனையோ பேர் அங்கீகரித்தனர். தான் சொல்லும் இஸ்லாம் தான் உண்மையானது, இப்போது உள்ளது உண்மையானது இல்லை என்றுச் சொன்னார். 

இவரை ஒரு பெரிய "அல்லாவின் சேவகன்" என்று அஹமத் தீதத் (Ahmad Deedat) என்ற இஸ்லாமிய ஊழியர் கூட புகழ்ந்தார். இவரின் Numerical Miracle பற்றி மிகவும் அதிகமாக அஹமத் தீதத் புகழ்ந்தார். 

படிக்கவும் இங்கே: en.wikipedia.org/wiki/Rashad_Khalifa 

Quote: from Wikipedia 

Khalifa was initially well-received throughout the Muslim world upon his mathematical discoveries embedded in the text of the Quran. Prominent Shaykh Ahmed Deedat referred to him as a "great servant" of God in his book based on Khalifa's discoveries "Al-Qur'an: The Ultimate Miracle 

1991ல் அவரை கொலை செய்தார்கள். இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இவரை அஹமத் தீதத் புகழ்ந்துள்ளாரே. இவரை நம்பும்படி நான் சொல்லவில்லை, இப்படி பல பேர் வருவார்கள் என்றுச் சொல்கிறேன். ( ஒரு தமிழ் பாட்டு: யாரோ வருவார், யாரோ போவார், வருவதும் போவதும் தெரியாது..) 

ரஷீத் அவர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பை இங்கு படிக்கலாம்:http://19.org/km/RK/1 

கீழ் கண்ட வசனங்களில் அவர் தன்னுடைய பெயரை எழுதிக்கொண்டு குர்-ஆனை மொழி பெயர்த்தார். இவைகள் முகமதுவிற்கு என்று எங்களுக்குத் தெரியும். 

Quote: 

Quran 13:30 

We have sent you (O Rashad) to this community, just as we did for other communities in the past. You shall recite to them what we reveal to you, for they have disbelieved in the Most Gracious. Say, "He is my Lord. There is no god except He. I put my trust in Him alone; to Him is my ultimate destiny." 

Quran 13:38 

We have sent messengers before you (O Rashad), and we made them husbands with wives and children. No messenger can produce a miracle without GOD's authorization, and in accordance with a specific, predetermined time. 

Quran 25:56 

We have sent you (Rashad) as a deliverer of good news, as well as a warner. 

Quran 34:28 

We have sent you (O Rashad) to all the people, a bearer of good news, as well as a warner, but most people do not know. 

Quran 34:46 

Say, "I ask you to do one thing: Devote yourselves to GOD, in pairs or as individuals, then reflect. Your friend (Rashad) is not crazy. He is a manifest warner to you, just before the advent of a terrible retribution." 

Quran 36:3 

Most assuredly, you (Rashad) are one of the messengers. 

Quran 42:24 

Are they saying, "He (Rashad) has fabricated lies about GOD!"? If GOD willed, He could have sealed your mind, but GOD erases the falsehood and affirms the truth with His words. He is fully aware of the innermost thoughts. 

Quran 81:22 

Your friend (Rashad) is not crazy.

இப்படி சிலர் இருக்கிறார்கள், இவரை நபி என்று நாங்கள் (ஏன், நீங்கள் கூட) ஏற்றுக்கொள்ள முடியுமா? சொல்லுங்கள்.

உமர்:

கிறிஸ்தவத்திற்கு வெளியே ஒருவர் "நபி என்று" சொல்லிக்கொண்டு வந்தால், அவர்களை கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றனர் என்று குற்றம்சாட்டும் இவர்கள், இஸ்லாமுக்குள்ளேயே, அதன் பெயரை வைத்துக்கொண்டே "நபி என்று" வந்த மற்றும் வருவார்கள் என்று நம்பப்படுகின்ற சிலரைப் (மெஹ்தி என்பவரும், ரஷீத காலிபா ) பற்றி இவர்களின் கருத்து என்ன என்று தெரிந்தால் தானே, நாங்களும் ஏன் முகமதுவை நிராகரிக்கிறோம் என்று சொல்வதற்கு ஏதுவாகும்? 

எழுதப்படும் ஒவ்வொரு வரிக்கும் பதில் சொல்லவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை? அவர்கள் கேட்கும் கேள்விக்கு நாங்கள் பதில் தரும்போது, சில முக்கியமான எங்கள் கேள்விகளுக்கும்(குர்-ஆன் வசனத்தில் உள்ள இவர்கள் திருத்தம், இஸ்லாமிய இதர நபிகள்) அவர்கள் கருத்து சொன்னால் தான் விவாதத்திற்கு அல்லது கருத்து பரிமாற்றத்திற்கு நன்றாக இருக்கும். 

பாகம் - 2(B) முற்றிற்று.

மூலம்: isakoran.blogspot.in/2007/08/2.html 

தேதி: 16 ஆகஸ்ட், 2007

தமிழ் முஸ்லிம் தளத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்